உத்தமபாளையம் : இலவச வெங்காய நாற்றுகள் அரசு பண்ணையிலிருந்து எடுத்து வந்து நடவு செய்வதில் தொழில்நுட்ப பிரச்னை எழுந்ததால் தோட்டக்கலைத்துறை மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
வெங்காய நாற்றுகள் இலவசமாக தோட்டக்கலைத்துறை வழங்குகிறது. இதை பெரியகுளம் அரசு தோட்டக்கலைப்பண்ணைக்கு சென்று விவசாயிகள் பெற்று நட வேண்டும். இதில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் கூறினர். இந்த நாற்றுகள் மிகவும் மெலிதானது. இவைகள் பெரியகுளத்தில் எடுத்து நடவு செய்யும் முன், முளைப்பு திறன் குறைந்துவிடும். விவசாயிகள் நர்சரி தயார் செய்து, நடவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பறித்து நடவு செய்தால் பலன் கிடைக்கும் என்றனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு உதவி இயக்குனர்கள் நர்சரி அமைத்து வெங்காய நாற்றுகள் வளர்க்க ஏற்பாடு செய்துள்ளது. உதவி இயக்குநர் பாண்டியன்ராணா, உத்தமபாளையத்தில் 18 கிலோ வெங்காய விதைகள் பெற்று நர்சரி அமைக்க ப்பட்டுள்ளது. விவசாயிகள் விரும்பும் இடத்தில் பெரியகுளம் பண்ணையிலும், அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் நாற்றுகள் பெற்றுக் கொள்ளலாம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE