ஆண்டிபட்டி : -ஆண்டிபட்டி ராஜ கம்பளத்தார் மாலக்கோயில் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்க தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் நாகராஜன் வரவேற்றார். பொருளாளர் காமையசாமி அறிக்கை வாசித்தார்.
ராஜகம்பள சமுதாயம் மற்றும் கட்டபொம்மன், மன்னர் திருமலை நாயக்கர் வழித்தோன்றல் கைளை தவறாக விமர்சித்து வரும் சீமானை கண்டித்தும், மாலக் கோயில் வழிபாட்டு தெய்வத்திற்கு விழா எடுக்கவும், எம்.பி.சி.,பிரிவில் இருக்கும் இச் சமுதாசயத்தை டி.என்.டி என்ற பிரிவில் சேர்த்து, கல்வி,வேலை வாய்ப்பில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் ஜக்கையன், கோபால், பால்பாண்டி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.---
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE