வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி பிரதோஷ வழிபாடு நடந்தது.
நேற்று அதிகாலையிலேயே தாணிப்பாறையில் குவிந்த பக்தர்கள் காலை 7:00 மணி முதல் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஓடைகளில் குளித்துவிட்டு பக்தர்கள் மலையேறினர். மாலையில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.முன்னதாக அறநிலையத்துறையினர் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தனர். அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் ஏற்பாடுகள் செய்திருந்தனர். டிச.,30 மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கபட உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE