கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனச் சரகம், பொக்காபுரம் வனப்பகுதியில், ஆண் காட்டு யானை முதுகில் காயத்துடன் உலா வருகிறது. வனத்துறையினர் அதனை கண்காணித்து, கால்நடை டாக்டர் பரிந்துரைப்படி காயத்துக்கு பழங்களில் மாத்திரைகள் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தொட்லிங் குறும்பர் பள்ளம் அருகே, முகாமிட்டுள்ள காட்டு யானைக்கு, இன்று காலை கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தி, முதுமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE