சென்னை : 'சிறிய ரக வாகனங்களில், பம்பரை கழற்றும் அரசு உத்தரவை திரும்பப் பெற வேண்டும்' என, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலர் கார்த்திகேயன், முதல்வருக்கு அனுப்பிஉள்ள மனு:சிறிய வாகன ஓட்டிகளின் உயிருக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய பம்பரை, வாகனங்களில் இருந்து கழற்றக் கூடாது. சொகுசு கார்களுக்கும், சிறிய வாகனங்களுக்கும், நிறைய வித்தியாசம் உள்ளது.சொகுசு கார்களில், இரண்டு முதல் ஆறு ஏர் பேக்குகள் இருக்கும். சிறிய விலைகளில் தயாரிக்கப்படும் கார் மற்றும் லோடு ஏற்றி செல்லும் வாகனங்களில், இந்த வசதிகள் இருக்காது.சிறிய வாகனங்களில், உயிருக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய பம்பரை கழற்ற, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது, உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை. இந்தியாவில் உள்ள, அனைத்து வாகனங்களிலும், ஏர் பேக்குகள் பொருத்தப்பட்ட பின், பம்பரை கழற்றும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அதுவரை இந்த நடைமுறையை, அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE