திருச்செங்கோடு : லஞ்சம் வாங்கிய நகராட்சி வரி வசூலிப்பவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் சண்முகம், 50. இவர், 'தன் வீட்டிற்கு வரி அதிகமாக உள்ளது; அதை குறைத்து தரவேண்டும்' என, நகராட்சியில், வரி வசூல் செய்யும் பணியாளர் ஆனந்தகுமார், 23, என்பவரிடம் கேட்டுஉள்ளார்.அவர், 7,000 ரூபாய் லஞ்சமாக கேட்டு, 5,000 ரூபாய்க்கு ஒப்புக் கொண்டார். முதல் தவணையாக, 3,500 ரூபாய் தருவதாக சண்முகம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் சண்முகம் புகார் செய்தார். நேற்று காலை, பணத்தை, ஆனந்தகுமார் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE