சென்னை : மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' நிதி நிறுவனங்கள், தமிழக மின் வாரியத்திற்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன.
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்திற்கு சொந்தமான அனல், நீர், எரிவாயு மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், மின்சாரம் கொள்முதல் செய்கிறது. அதற்கான பணத்தை, மின் சப்ளை நிறுவனங்களுக்கு, குறித்த காலத்தில் வழங்குவதில்லை.மார்ச் இறுதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தொழிற்சாலைகள் போன்றவை செயல்படவில்லை. இதனால், மின்சார விற்பனை பாதித்ததால், பல மாநில மின் வாரியங்களுக்கு, நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, மின் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, மத்திய அரசு மின் வாரியங்களுக்கு, சிறப்பு கடன் திட்டத்தை அறிவித்தது.அத்திட்டத்தின் கீழ், கடன் பெற்று, மின் சப்ளை நிறுவனங்களுக்கு, நடப்பாண்டு ஜூன் வரை உள்ள நிலுவை தொகையை வழங்க, தமிழக மின் வாரியம் முடிவு செய்தது. இதற்காக, 32 ஆயிரம்கோடி ரூபாய் கடன் கேட்டு, பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன் ஆகிய நிறுவனங்களிடம்விண்ணப்பங்கள் சமர்ப்பித்தது. பவர் பைனான்ஸ், 12 ஆயிரத்து, 400 கோடி ரூபாயும்; ரூரல் எலக்ட்ரிபிகேஷன், 17 ஆயிரத்து, 830 கோடி ரூபாயும் கடன் வழங்க, ஒப்புதல் அளித்தன.
இருப்பினும், கடன் தொகை விடுவிக்கப்படவில்லை. அதை, விரைவாக வழங்குமாறு, மின் வாரியம் வலியுறுத்தியது.இந்நிலையில், முதல் கட்டமாக, தற்போது, பவர் பைனான்ஸ், 4,359 கோடி ரூபாய்; ரூரல் எலக்ட்ரிபிகேஷன், 6,645 கோடி ரூபாய் கடன் தொகையை விடுவித்துள்ளன. அதில், பாதி தொகைக்கு மேல், சப்ளை நிறுவனங்களுக்கு, மின் வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE