சென்னை : தமிழகத்தில், ஒன்பதுமாதங்களுக்கு பின், 'டாஸ்மாக்' மதுக்கடைகளை ஒட்டிய பார்கள், இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 17 முதல் பார்கள் மூடப்பட்டன. ஒன்பது மாதங்களுக்கு பின், 50 சதவீத இருக்கைகளுடன், இன்று முதல் பார்களை திறக்க, நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பார்களில் பணிபுரியும் ஊழியர்கள், சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், முக கவசம்அணிந்திருக்க வேண்டும். சோப்பு மற்றும் கிருமிநாசினியால், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் 50 சதவீத இருக்கையில் மட்டுமே, 'குடி'மகன்களை அனுமதிக்க வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்றி, இருக்கைககள் போட வேண்டும்பார் வாயிலில், உடல்வெப்ப பரிசோதனை செய்வதுடன், கிருமிநாசினிவைக்க வேண்டும். 'குடி'மகன்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேஜை, நாற்காலிகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.இவை உட்பட, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE