மரக்காணம் : தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளி இறந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே, ஆரோவில் அடுத்த இரும்பை செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று மாலை, 4:00 மணியளவில், மரக்காணத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஆறுமுகம், 54, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பெற வந்தார். டாக்டர் இல்லாத நிலையில், பணியிலிருந்த செவிலியர், டாக்டருக்கு போன் செய்து, எந்த ஊசி போடலாம் என கேட்டுள்ளார். டாக்டர் பரிந்துரைப்படி, செவிலியர் ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் ஆறுமுகம் இறந்தார்.உறவினர்கள், ஆரோவில் போலீசில் புகார் அளித்தனர். சம்பவம் குறித்து மருத்துவமனை டாக்டர், அவரது மனைவி, இரண்டு பெண் ஊழியர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE