தேனி : பா.ஜ., ஓட்டு வங்கியை உருவாக்க 32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்களில் ஓட்டுச்சாவடி வாரியாக உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தை பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக மாற்ற வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஓட்டுச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 32 பேருக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 50 சதவீதம் அதாவது 16 ஓட்டுக்களை பா.ஜ.,விற்கான ஓட்டு வங்கியாக மாற்றுவது கட்டாயம். சமுதாய தலைவர்கள் பட்டியல், முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலை தயாரித்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடையும் வகையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில தலைமை உத்தரவுப்படி தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE