பழநி : பழநி மலைக்கோயில் செல்ல ரோப்கார் சேவை நேற்று முதல் மீண்டும் துவங்கியது.
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்ல ரோப் கார் இயக்கப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.பல மாதங்கள் இடைவெளிக்குப்பிறகு நேற்று (டிச.28) காலை 9:30 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின் ரோப் கார் சேவை மீண்டும் துவங்கியது. செயல் அலுவலர் கிராந்தி குமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE