கோவை:கோவை, முத்தண்ணன் குளம் மேற்கு பகுதியில், ஓம் சக்தி நகரில் உள்ள, 98 ஆக்கிரமிப்பு வீடுகளில், மின் இணைப்பு துண்டிக்கும் பணி நேற்று நடந்தது.ஸ்மார்ட் சிட்டி பணிக்காக, பூசாரிபாளையம் ரோட்டில், முத்தண்ணன் குளக்கரையில் வசித்தவர்களுக்கு, மாற்று வீடு வழங்கி விட்டு, ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மாநகராட்சியால் இடித்து அகற்றப்பட்டன.பூசாரிபாளையத்துக்கும், உணவு தானிய கிடங்கு வளாகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓம்சக்தி நகர் உள்ளது; 360 வீடுகள் இருக்கின்றன. இவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று வீடு வழங்க, குலுக்கல் நடத்தியதில், 263 பேர் பெற்றுக் கொண்டனர். அதில், 98 பேர் வீடு பெற்று, மின் இணைப்பை மாற்றிக் கொண்டனர்.இருப்பினும், பலர் வீட்டை காலி செய்யாமல் இருந்தனர். அவர்கள் வசித்த பழைய வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கும் பணி, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE