கோவை:பெண் போலீசின் கையை கடித்த பெண்ணிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 31. அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து, கோவைக்கு பஸ்ஸை ஓட்டி வந்தார். சிங்காநல்லுார் அருகே, அவ்வழியாக மொபட்டில் சென்ற நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த சுமதி, 36, அவரது சகோதரர் செந்தில்குமார், 30 ஆகியோர், பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக, செல்வகுமார் வழி விடாமல் சென்றுள்ளார்.
ஆத்திரமடைந்த செந்தில்குமார், சுமதி ஆகியோர் பஸ்ஸை தடுத்து நிறுத்தி, செல்வக்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர். சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பெண் போலீஸ் கவுதமி, அங்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் ஆத்திரமடைந்த சுமதி, கவுதமியின் கையை கடித்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிங்காநல்லுார் போலீசார், சுமதி, செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE