வேலுார் : கொரோனா பரவல் காரணமாக, சென்னை புழல், வேலுார் உட்பட, மத்திய சிறை கைதிகளுக்கு, தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சென்னை புழல், வேலுார், பாளையங்கோட்டை என, ஒன்பது மத்தியச் சிறைகள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக, மத்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, ஆண், பெண் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளை சிறைகளில், கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது, தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, கைதிகளுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு, மத்தியச் சிறைக் கைதிகளுக்கு, தொண்டு நிறுவனங்கள் வாயிலாக உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தடையை கிளைச் சிறைகளிலும் அமல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE