கோவை:கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய, 36வது சிறப்பு பொதுப் பேரவை கூட்டம், பச்சாபாளையத்தில் நேற்று நடந்தது.ஆவின் தலைவர் ராஜூ தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்திலே தலைசிறந்த ஒன்றியமாக கோவை ஆவின் திகழ்கிறது. அரசின் தொலைநோக்கு திட்டத்தால் தினமும், 5 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறனுடன் செயல்பட்டுவருகிறது. திருப்பூர் பாலையும் சேர்த்து நாளொன்றுக்கு, 3 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது. ''மக்களிடையே ஆவின் பால் துாயது, புதியது, சுகாதாரமானது என்ற நம்பிக்கையை, ஆழமாக விதைத்துள்ளோம். கொரோனா சமயத்தில் மக்கள் தேவையை தீர்ப்பதில், ஆவின் சிறந்த பங்காற்றியுள்ளது,'' என்றார்.ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE