திருப்பூர்:திருப்பூர், பி.என்., ரோட்டில் மக்கள் பயன்பாட்டுக்கு மாநகராட்சி குமரன் நினைவு பூங்கா திறக்கப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி, பி.என்., ரோட்டில் மாநராட்சி குமரன் நினைவு பூங்கா உள்ளது. பூங்கா பராமரிப்பின்றி, முட்புதர்மண்டி, மக்கள் பயன்படுத்த முடியாமல், பாழடைந்து காணப்பட்டது. பூங்காவை பராமரிக்கும் வகையில், மத்திய லயன்ஸ் கிளப் சார்பில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மொத்தம், 25 லட்சம் ரூபாய் செலவில், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, இருக்கை, மின்விளக்கு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிவு பெற்ற நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா நேற்று திறக்கப்பட்டது.மத்திய அரிமா சங்க தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமை வகித்தார். ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். அதன், பூங்கா வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன.முதலாவது மண்டல உதவி கமிஷனர் வாசுகுமார், லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் கருணாநிதி, ஸ்ரீ குமரன் மருத்துவமனை சேர்மன் செந்தில்குமரன், முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், டீலக்ஸ் பனியன் நிறுவன உரிமையாளர் சம்பத், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஜீவானந்தம், ஆறுமுகம், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE