திருப்பூர்:திருப்பூர் மாநகர மாவட்ட த.மா.கா., சார்பில் கட்சி தலைவர் வாசன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி, அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில், காலேஜ் ரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. காந்தி நகர், மூப்பனார் பவனில் நடந்த நிகழ்ச்சியில், மாற்று கட்சியில் இருந்து இளைஞர், மகளிர் உள்ளிட்ட, 150 பேர் இணைந்தனர்.அதன்பின், செங்கப்பள்ளி மகிழ்ச்சி கருணை இல்லத்தில் முதியோர், 50 பேருக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலை,மதிய உணவும் வழங்கப்பட்டது.தொடர்ந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் முன், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, மாநகர மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாநில பொது செயலாளர் விடியல் சேகர், மாநில செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் காந்திராஜன், மாவட்ட துணைத்தலைவர் செழியன், ஆசிரியர் அணி தலைவர் சிவசுப்ரமணியம், மாவட்ட தொழிற்சங்க தலைவர் தனசேகர், வர்த்தகர் அணி சுகுமார், இளைஞரணி நடராஜ், மாற்றுத்திறனாளி அணி பாலாஜி, மகளிர் அணி ஷர்மிளா மாற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் உட்படபலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE