திருப்பூர்:கொண்டைக் கடலையோடு கூட்டுப்பயிராக கொத்த மல்லியை சாகுபடி செய்ய, விவசாயிகள் ஆர்வம் கொண்டுள்ளனர்.சமையலில் கொத்தமல்லி முக்கிய அங்கம் வகிப்பதால், இதற்கு கிராக்கி இருந்து கொண்டே உள்ளது. குறுகிய காலப் பயிர் என்பதால் சிறு மற்றும் குறு விவசாயிகள் கொத்தமல்லியை பயிர் செய்து, அதிக லாபம் பெறுகின்றனர்.அவ்வகையில், திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கொத்தமல்லி அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிலர், கொண்டைக் கடலையோடு கூட்டுபயிராக, கொத்தமல்லியை சாகுபடி செய்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:கொத்தமல்லி, 90 நாள் பயிர். ஐப்பசி மாதக் கடைசி வாரம், விதைப்புக்கு ஏற்ற காலம். ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ கொத்தமல்லி விதைகள் தேவைப்படும். விதைத்த, 80ம் நாளில், அறுவடைக்குத் தயாராகி விடுகிறது. பல இடங்களில், கொண்டைக்கடலையோடு கூட்டுப்பயிராக, கொத்தமல்லியே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE