கூடலுார்:முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி வழியாக செல்லும் ஆற்றை கடந்து செல்ல, மைசூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வளைவான அப்பகுதியில், குறுகிய பாலத்தை வாகனங்கள் சிரமப்பட்டு கடந்து செல்கின்றன.இந்நிலையில், பாலத்தின் ஒரு பகுதியில் தடுப்பு உடைந்து, வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் பாலத்தை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலை தமிழக, கர்நாடக, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். கார்குடி அருகே, சேதமடைந்த பாலத்தின் தடுப்பு சீரமைக்கப் படாமல் உள்ளதால், அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. பெரும் விபத்துகள் ஏற்படும் முன் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE