சென்னை : வேதியியல் பாட ஆசிரியர்களுக்கு, நாளை பணி நியமனம் வழங்கப்படுகிறது.
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள வேதியியல் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019ல் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின், ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி பட்டியலை, கடந்த வாரம் அறிவித்தது.இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட முதுநிலை பட்டதாரிகளுக்கு, நாளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், கவுன்சிலிங் வழியாக பணி நியமனம் வழங்க, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பணி நியமனம் பெறுவோர், வரும், 4ம் தேதி, தங்கள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, பள்ளிகளில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE