புதுடில்லி : நாட்டில், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை, 97.82 லட்சத்திற்கும் மேலானோர் குணமடைந்துள்ளனர். இதனால் மீட்பு விகிதம், 96 சதவீதத்தை எட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 7.15 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.இதன் முடிவில், 20 ஆயிரத்து, 21 பேரிடம், வைரஸ் பாதிப்பு உறுதியானது. இவர்களுடன் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1.02 கோடியாக அதிகரித்து உள்ளது.பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 2.77 லட்சம் பேர், சிகிச்சையில் உள்ளனர். இவர்களின் விகிதம் மொத்த பாதிப்பில், 2.72 சதவீதம்.கொரோனா பாதிப்பில் இருந்து, 97 லட்சத்து, 82 ஆயிரத்து, 669 பேர் குணமடைந்துள்ளனர்;
மீட்பு விகிதம், 95.83 சதவீதத்தை எட்டியுள்ளது.வைரஸ் பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில், 66 பேர், மேற்கு வங்கத்தில், 29; கேரளாவில், 25 பேர் உட்பட, 279 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களுடன் நாட்டின் பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 901 ஆக அதிகரித்துஉள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக உள்ளது. பலி எண்ணிக்கையில், 49 ஆயிரத்து, 255 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில், 12 ஆயிரத்து, 69 பேரும், அதற்கடுத்ததாக கர்நாடகாவில், 12 ஆயிரத்து, 62 பேரும் உயிரிழந்துஉள்ளனர்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.பரிசோதனையில் உ.பி., முதலிடம்கொரோனா பாதிப்பை கண்டறிய, நாடு முழுதும், 16.88 கோடிக்கும் மேலானோரிடம் பரிசோதனைகள் நடந்துள்ளன. இதில், 2.3 கோடி பேருடன், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா தலா, 1.4 கோடி பேருடன், இரண்டாம் இடத்தில் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE