சென்னை : 'வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தெற்கு கடலோர மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடற்பகுதியில், வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,
புதுக்கோட்டை மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்யும்.

மற்ற இடங்களில், வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் இரண்டு நாட்களுக்கு,
கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில், வானம் மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்சம், 30; குறைந்தபட்சம், 21 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு
உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE