புதுச்சேரி; வாழைக்குளம் அப்பார்ட்மெண்ட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த உத்தரபிரதேச நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சிசர்குமார்,52; திருமணமாகாதவர். வாழைக்குளம், ஆர்கியா அப்பார்ட்மெண்ட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவரது சகோதரர் ஷாலாவுராய் உத்தரபிரதேசத்திலும், தங்கை காஜாபாத்தில் வசித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி புதுச்சேரி வந்து, சிசர்குமாரை சந்தித்து விட்டு செல்வர். சிசர்குமார் 3 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை.அவரது அப்பார்ட்மெண்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. எதிர்வீட்டில் வசிக்கும் சந்தன், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.முத்தியால்பேட்டை போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கை அறையில் கவிழ்ந்த நிலையில் சிசர்குமார் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE