கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் தாலுகாவில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத் துவக்கவிழா நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு,மாவட்டத் தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார்.ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் குப்புசாமி,வசந்தராயன்,கருணாகரன்,இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்பெற்ற தலைமைஆசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்டப் பொருளாளர் சிவநேசன் ஓய்வூதிய உத்திரவாத தீப்பைப்பெற்றுத்தந்த நகராவின் படத்தை திறந்துவைத்தார். கிளையின் தலைவராக கார்த்திகேயன்,செயலாளர் கணேசன்,பொருளாளர் அருணாசலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு சார்நிலைக்கருவூலம் அமைத்திடவேண்டும். பொங்கல் பரிசு வழங்கக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE