விழுப்புரம்; தமிழக அரசு போக்குவரத்துக் கழக பட்டாளி தொழிற்சங்க இணையத்தின், மாநில பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, கடலுார் மண்டல சிறப்பு தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். சென்னை மெட்ரோ கார்ப்பரேஷன் மண்டல பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன்,சிவக்குமார், கடலுார் மண்டல பொதுச் செயலாளர் ராஜமூர்த்தி, திருச்சி மண்டலத் தலைவர் ஆனைமூர்த்தி முன்னிலை வகித்தனர்.எஸ்.இ.டி.சி., பொதுச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில இணைய பொருளாளர் ராமலிங்கம், மண்டல இணைய செயலாளர் குப்புராஜன் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், 14வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE