விழுப்புரம்; ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.செஞ்சி தாலுகா, கம்மந்துார் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;கம்மந்துார் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமித்து, சிலர் விவசாய பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்தனர். பின், இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், மீண்டும் தற்போது ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர்.எனவே, ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE