கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சேக்கிபட்டியில் அறுவடை செய்யும் நிலையில் பயிர் காப்பீடு செய்த நெற் பயிர்கள் மழைக்கு சாய்ந்து முளைக்க துவங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இங்கு டீசல் மோட்டார் மூலம் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சில நாட்களாக பெய்த மழைக்கு சாய்ந்தன. அடைக்கன், மகாராஜன் உள்ளிட்ட பல விவசாயிகளின் நெற் பயிர்கள் நிலத்தில் சாய்ந்து முளைக்க துவங்கியுள்ளன.
விவசாயி ஜபர்சன்ராஜ் கூறுகையில்,''ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்து பயிரிட்டோம். அறுவடை செய்யும் நிலையில் மழை பெய்ததால் நெற்கதிர்கள் சாய்ந்து முளைத்து விட்டது. பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்துள்ளதால் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.வேளாண் உதவி இயக்குனர் மதுரைசாமி கூறுகையில்,''நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE