வானுார்; வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது.பயிற்சியை பி.டி.ஓ.,க்கள் முருகன், ராமதாஸ் துவக்கி வைத்தனர். மாவட்ட முதன்மைப் பயிற்றுனர்கள் மதுமதி, மங்கரவத்தாள் ஆகியோர், திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.ஒவ்வொரு ஊராட்சிகளிலில் இருந்தும் ஊராட்சி அளவிலான செயலாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க செயலாளர்கள், தன்னார்வலர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இளைஞர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், திட்ட மேலாளர் மோகனா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE