வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகாவில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளுக்கு உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல், நன்கு நின்று விளையாட மண் குத்துதல், நீச்சல், நடை ஓட்டம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படும். கிராம கோயில் காளைகளை வளர்த்து, பராமரிக்கும் இளைஞர்களும் காளையை போட்டிக்கு தயார்படுத்துகின்றனர்.
போடிநாயக்கன்பட்டி ஆல்வின்: சிறுகன்று குட்டியாக நான் வாங்கி வளர்த்தபோது கன்றின் உடல் நிலை பாதித்தது. கிராம அய்யனார் கோயிலுக்கு நேர்ந்துவிட்டேன். தற்போது கோயில் காளையாக நலமுடன் வளர்ந்துள்ளது. இளைஞர்களாக கவனித்து பயிற்சி அளிக்கிறோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE