உளுந்துார்பேட்டை,; உளுந்துார்பேட்டை அருகே முன்விரோத தகராறில் ஆபாசமாக திட்டி, தாக்கிக் கொண்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் மகள் ராதிகா, 26; சுரேஷ் மனைவி கனகவள்ளி, 30; இருவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் ஆபாசமாக திட்டி, தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கனகவள்ளி, மாதேஸ்வரன் மனைவி கீதா, 55; பாண்டியன் மனைவி பச்சையம்மாள், 35; சாமிக்கண்ணு மனைவி அமுலு, 60; ராதாகிருஷ்ணன் மனைவி அன்னபூரணி, 60; மகள் ராதிகா, ரகோத்தமன் மனைவி அருணா, 35; ஆகிய ௭ பேரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE