கச்சிராயபாளையம்; கல்வராயன்மலையில் 6,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித் தனர்.எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், திருக்கோவிலுார் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் சாராய ரெய்டு நடத்தினர்.அப்போது, சின்ன திருப்பதி, எழுத்துார், தும்ராம்பட்டு, மேல்சாத்தனுார் கிராமங்களில் உள்ள வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் வைத்திருந்த 6,500 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE