விழுப்புரம் - விழுப்புரம் நகராட்சிக்கு வாடகை பாக்கி 1.97 லட்சம் ரூபாய் செலுத்ததாத 2 கடைகளுக்கு, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.விழுப்புரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ளன. இங்குள்ள சலுான் கடை மற்றும் பூக்கடையில், கடந்த ஓராண்டாக நகராட்சிக்கு வாடகை பாக்கி 1.97 லட்சம் ரூபாய் வைத்துள்ளனர். இதற்காக, நோட்டீஸ் அளித்தும் வாடகை பணம் செலுத்தவில்லை.இதையடுத்து, நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி உத்தரவின் பேரில், ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையிலான ஊழியர்கள், நேற்று 2 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE