விழுப்புரம் - ஆரோவில் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆரோவில் அடுத்த இடையன்சாவடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கொத்தனார். மனைவி மஞ்சுளா, 26; இவர்களுக்கு, கடந்த நவம்பர் 4ம் தேதி திருமணம் நடந்தது.திருமணமாகிய சில தினங்களில், தான் ஒரு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால், மஞ்சுளா மீது செந்தில்குமார் சந்தேகமடைந்தார். மனமுடைந்த மஞ்சுளா, கடந்த 22ம் தேதி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடன் அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE