பேரையூர் : பேரையூர் பகுதி ரோடுகளில் குதிரைவாலி உலர்த்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் தற்போது குதிரைவாலி அறுவடை தொடங்கியுள்ளது. இது உலர்த்தப்பட வேண்டும். பேரையூர்- உசிலம்பட்டி, வத்ராப், டி.கல்லுப்பட்டி, எம்.சுப்புலாபுரம் ரோட்டை விவசாயிகள் குதிரைவாலி கதிர்களை உலர்த்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதி கிராமங்களில் களங்கள் கிடையாது.
எனவே ஆங்காங்கே ரோட்டில் கற்களை வைத்து அதனருகில் உலர்த்துகின்றனர். ஏராளமான வாகனங்கள் சென்று வரும்நிலையில் இதுபோன்ற நடவடிக்கையால் டூவீலரில் செல்வோர் விழுகின்றனர். மாநில நெடுஞ்சாலைத் துறையினர் இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE