கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை 'ஸ்கேன்' செய்யும் பணி நேற்று துவங்கியது.வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேவையான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலம், லதார் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, தச்சூர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை 'ஸ்கேன்' செய்யும் பணி நேற்று துவங்கியது. சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில், தேர்தல் தரவு ஆப்ரேட்டர்கள் ஈ.வி.எம்., செயலி மூலம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஸ்கேன் செய்தனர்.இப்பணியை சப் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது சுரேஷ், தாசில்தார் பிரபாகரன், மணிகண்டன் (தேர்தல்), தேர்தல் துணை தாசில்தார் வினோத், தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.இன்று முதல் இயந்திரங்கள் பரிசோதனை செய்யும் பணி துவங்குகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE