விருத்தாசலம் - மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடு மற்றும் விவசாய நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, மா. கம்யூ.,கட்சியினர் நேற்று விருத்தாசலம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அசோகன், வட்டக் குழு உறுப்பினர்கள் கலைச்செல்வன், மாரிமுத்து, கிளை செயலாளர்கள் ஜெகதீசன், கணேசன், வேலன், லட்சுமி, அருள், சபிதா, முருகவேல், விவசாய சங்க வட்ட செயலாளர் செல்வக் குமார், வாலிபர் சங்க வட்டத் தலைவர் பரமசிவம், வட்ட செயலாளர் நெல்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE