திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பழநியை சேர்ந்த பாலமுருகன் 33, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தரக் கோரி தேசிய கொடியுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
பழநி அருகே கோதை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் 33. இவருக்கு சொந்தமான நிலத்தை அரசு தரப்பில் ஆதி திராவிடர்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பதாகவும், மேலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், கலெக்டர், பழநி தாசில்தாரிடம் பல முறை மனு அளித்துள்ளார்.இந்நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்காதததால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அரசும், தனியாரும் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை மீட்டுத்தரக் கோரி, தேசிய கொடியுடன் பாலமுருகன் தர்ணாவில் ஈடுபட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE