தாண்டிக்குடி : தாண்டிக்குடி - பண்ணைக்காடு ரோட்டில் குவிக்கப்படும் கட்டுமானப் பொருட்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் மெயின் ரோட்டோரம் ஏராளமானோர் நிலங்களை வாங்கி சொகுசு பங்களாக்கள் கட்டும் பணியை துவக்கியுள்ளனர். இதற்கான தளவாடப் பொருட்களை ரோட்டில் குவித்தே பணிகளை செய்து வருகின்றனர். இதை கடந்து செல்லும் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தடுமாறி தாழ்வான ரோட்டோரம் விபத்து அபாயத்தில் சிக்கும் நிலை உள்ளது.இவ்வழியே கடந்து செல்லும் போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாத நிலை உள்ளது.போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE