ஊத்துக்கோட்டை - 'ஹெல்மெட் அணிந்ததால், எனக்கு ஏற்பட்ட விபத்தில் நான் உயிர் பிழைத்தேன்' என, டி.எஸ்.பி., தெரிவித்தார்.ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில், போக்குவரத்து போலீசார் சார்பில், டூ - வீலரில் செல்பவர்களுக்கு, ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.டி.எஸ்.பி., சாரதி, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு, ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.பின், அவ்வழியே ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, பேனா பரிசாக வழங்கினார். டி.எஸ்.பி., சாரதி பேசியதாவது:இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு செல்வதால், விபத்து ஏற்பட்டாலும், உயிரிழப்பை தடுக்கலாம்.கடந்த, 2002ல், திருத்தணியில் பணியாற்றிய போது, ஹெல்மெட் அணிந்ததால், எனக்கு ஏற்பட்ட விபத்தில் நான் உயிர் பிழைத்தேன்.இனி வரும் காலங்களில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைவரும், சாலை விதிகளை மதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE