சோழவரம் - நீர் நிலைகளில் மாசு ஏற்படுத்தும் வகையில், கழிவு நீர் கொட்டிய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.சோழவரம் அடுத்த, காரனோடை பகுதியில், பல்வேறு பகுதிகளில் இருந்து, கழிவு நீர் கொண்டு வந்து, கொசஸ்தலை ஆற்றில் கொட்டி, மாசு ஏற்படுத்துவதாக புகார்கள் வந்தன.போலீசார், நேற்று முன்தினம், காரனோடை மீன் மார்க்கெட் அருகே, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தர். அப்போது, டிராக்டரில் கொண்டு வரப்பட்ட கழிவு நீர், ஆற்றில் கொட்டப்படுவதை கண்டனர்.வாகனத்தை பறிமுதல் செய்து, ஓட்டுனரை காவல் நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE