ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் உப்பு காற்றில் துருப்பிடிக்காத ரசாயன பெயின்ட் பூசும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
1914ல் பாம்பன் கடலில் அமைத்த ரயில் பாலம், ராமேஸ்வரத்தை இணைக்கும் கேந்திரமாக உள்ளது. நுாற்றாண்டு விழா கண்ட இப்பாலம், உப்பு காற்றில் அடிக்கடி துருப்பிடிக்கும். இதன் மூலம் பாலத்தின் உறுதிதன்மை பலவீனமாகும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க பாம்பன் பாலத்தை இரு பொறியாளர் தலைமையில் 30க்கும் மேலான ரயில்வே ஊழியர்கள், தினமும் பராமரித்து வருகின்றனர்.
பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் துருப்பிடிப்பதை தடுக்க 3 முதல் 4 மாதத்திற்கு ஒருமுறை ரசாயனம் கலந்த அமோனியம் பெயின்ட் பூசுவர். சில நாட்களாக ரசாயணம் கலந்த பெயின்ட் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இப்பணி ஓரிரு வாரத்தில் முடிந்து விடும். இதனால் ரயில் போக்குவரத்திற்கு தடை இல்லை என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE