வாலாஜாபாத்; மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 'பைப் லைன்' அமைக்கும் பணிக்கு, அ.தி.மு.க.,வினர் நேற்று, பூமிபூஜை போட்டனர்.காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை இந்திரா நகர் பகுதிக்கு, ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்ட கட்டிக்கொடுக்க வேண்டும் என, பொதுமக்கள், பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதை ஏற்று, 22 லட்சம் ரூபாய் செலவில், கனிம வள நிதியில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் புதிய பைப் லைன் அமைக்கும் பணி, நேற்று துவங்கியது.இந்த பூமி பூஜையில், முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் சோமசுந்தரம் ஆகியோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தனர். இதில், கட்சியினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE