திருவொற்றியூர்; சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட ஆத்திரத்தில், கடைக்காரரை கத்தியால் வெட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் விரேந்தர்பால், 35. கிராமத்தெரு சந்திப்பில், பானிபூரி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு வந்த மூவர், பானிபூரி சாப்பிட்டனர்.பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். சுதாரித்த விரேந்தர் பால், பணம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால், கடைக்காரரின் தாடையில் வெட்டி தப்பினர்.காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக, திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு ஆறு தையல் போடப்பட்டது.திருவொற்றியூர் போலீசார், ஓசி பானிபூரிக்கு பிரச்னை செய்த, திருவொற்றியூர், கிராமத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், 24, தியாகராஜன், 21, ஆகியோரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE