சென்னை; இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த ஆறு கலைக் குழுக்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய், நிதியுதவி வழங்கப்பட்டன.கலை பண்பாட்டுத் துறையின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக, கிராமியக் கலைஞர்கள், கலைக் குழுக்களுக்கு, பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில், 2019- - 20-ம்ஆண்டுக்கான நிதியுதவிபெற, சென்னை மாவட்டத்தில், அன்பழகன்கலைக்குழு, பல்கீஸ் கலைக்குழு, தேவி கலைக்குழு, தலைவி கலைக்குழு உட்பட ஆறு கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.இக்கலை குழுக்களுக்கு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE