பொள்ளாச்சி:பொள்ளாச்சி நேஷனல் கூடைப்பந்து கழகத்தின் சார்பில், கடந்த மூன்று மாதங்களாக நடந்த பயிற்சி முகாமின் தேர்ச்சி விழா, கூடைப்பந்து மைதானத்தில் நடந்தது.திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மாடல் அலுவலர் ராம்மோகன் தலைமை வகித்தார். பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜன், கூடைப்பந்தாட்ட முன்னாள் தேசிய வீரர் ரமேஷ் பங்கேற்றனர். சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசினார்.முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர்களும், பயிற்சி பெற்ற மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற, 51 மாணவர்களுக்கு பரிசு மற்றும் விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. பயிற்றுனர் அசோக்குக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE