பொள்ளாச்சி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி கோ-ஆப்டெக்சில், 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியது.பொள்ளாச்சி, கடைவீதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில், பண்டிகை கால விற்பனைக்கு, 20 - 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. வரும் பொங்கலுக்காக, காஞ்சிபுரம், ஆரணி, சேலம் பகுதியில் உற்பத்தியாகும் பட்டு சேலைகள், வேட்டிகள், அங்கவஸ்திரம், கோவை காட்டன், சில்க் காட்டன் சேலைகள், காட்டன் பிரின்ட் சேலைகள், சுடிதார், நைட்டி, ரெடிமேட் சர்ட்கள், போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.இத்துடன், சாப்ட் சில்க் சேலைகள், புதிய டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கடன் வசதி அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பெறலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE