ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், சிறுதானிய சாகுபடி மற்றும் பயன்பாடு குறித்து, வேளாண்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், சிறு தானிய உற்பத்திக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து, வேளாண் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.ஆனைமலை ஒன்றியத்தில், 'ரோடு ஷோ' என்ற தலைப்பில், வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது. துவக்க விழாவில்,எம்.எல்.ஏ., கஸ்துாரி தலைமை வகித்தார், ஆனைமலை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, வேளாண் அலுவலர் ஸ்ரீமதி மற்றும் விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.முதற்கட்டமாக வாகனத்தை பயன்படுத்தி, ஆனைமலை, ஆத்துப்பொள்ளாச்சி, ரமணமுதலிபுதுார் உள்ளிட்ட கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வேளாண்துறையினர் கூறுகையில், 'சிறு தானியங்களில், கால்சியம், புரதம், இரும்பு உள்பட பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளன. ஆனால், மக்கள் பலரும் தற்போது, சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது இல்லை; அதன் உற்பத்தியும் கணிசமான அளவு குறைந்துள்ளது.தற்போது, சிறு தானிய உற்பத்தியை பெருக்க விவசாயிகளிடமும், சிறு தானிய உணவு பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE