பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலையில், கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி., தியேட்டர் ரோட்டில், மேற்கு போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தது சோதனையிட்டனர். பைக்கில், 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்ததுடன், புளியம்பட்டியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்கிற மணிகண்டன், 30, என்பதும் தெரிய வந்தது. அந்த நபரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆனைமலைஆனைமலை, நெல்லுக்குத்திப்பாறை அருகே, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் சோதனை செய்தனர். இதில், அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.விசாரணையில், தென்சங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 24, என்பது தெரியவந்தது. அவரை ஆனைமலை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கண்துடைப்புகோட்டூர், ஆழியாறு, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பல இடங்களில், கஞ்சா விற்பனை அதிகளவில் உள்ளது. ஆனால், மாதம் ஒரு முறை போலீசார், உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காண்பிப்பதற்காக, ஒருவரை கைது செய்து, 50 கிராம் முதல், 100 கிராம் பறிமுதல் என, வழக்கு பதிவு செய்கின்றனர்.கஞ்சா சப்ளை செய்யும் ஏஜன்டுகளிடம் 'கவனிப்பு' பெற்று, எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக போலீசார் உள்ளனர். இளைஞர்கள் வாழ்வை காவு வாங்கும் கஞ்சா விற்பனையை தடுக்க, மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE