அன்னுார்;கூட்டு குடிநீர் திட்ட பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதியில், மக்கள் அவதிப்படுகின்றனர்.சிறுமுகை அருகே பவானி ஆற்றிலிருந்து நீர் எடுத்து, அன்னூர் வரும் வழியில், சுமைதாங்கி பகுதியில் சுத்திகரித்து, அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் ஆகிய மூன்று பேரூராட்சிகள் மற்றும், 155 குடியிருப்புகளுக்கு, குடிநீர் வழங்கும், 241 கோடி ரூபாயிலான கூட்டு குடிநீர் திட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடக்கின்றன.தென்னம்பாளையம் சாலையில் குழாய் பதிக்கும் பணி, 20 நாட்களாக நடக்கிறது. இதற்காக, தென்னம் பாளையம் சாலையில், போலீசார் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.தென்னம்பாளையம், வாகராயம்பாளையம், ராயர்பாளையம், தொட்டியனுார், ஆலாம்பாளையம், குமாரபாளையம் உட்பட, 20 ஊர்களில் இருந்து மக்கள், தென்னம்பாளையம் சாலை வழியாகத்தான் அன்னுார் வருகின்றனர்.போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிகளில், குழாய் பதிக்கும் பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சி, போலீஸ் என அனைத்து தரப்பினரிடமும், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE