மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், திருவாதிரை திருக்கல்யாண வைபவம் விழா, நாளை நடக்கிறது.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், மனோன்மணி அம்மன் உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு நாளை காலை, 9:00 மணியிலிருந்து, 11:00 மணிக்குள் மனோன்மணி அம்மனுக்கும், வெள்ளியங்கிரி ஆண்டவருக்கும், திருவாதிரை திருக்கல்யாண வைபவம் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE